Monday, August 20, 2007

New Film Songs

More old and new songs lyrics CLICK HEAR

Nan Avan Illai, Ann Enaku Mayakam {ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்}

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...
உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு...

Sunday, August 19, 2007

ALAYAMANI, MANATAM THANGA MAIYL {மானாட்டம் தங்க மயிலாட்டம்}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: மானாட்டம் தங்க மயிலாட்டம்
குரல்: பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்


மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

(மானாட்டம்)

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

(மானாட்டம்)

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்

(மானாட்டம்)

ALAYAMANI, KAL ALLAM MANIKA {கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2)

(கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லயென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம்)

ALAYAMANI, SATTI SUTHADADA KAI VITA {சட்டி சுட்டதடா கை விட்டதடா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

(சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

(சட்டி)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

(சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

(சட்டி)

ALAYAMANI, THUKAM UNN KANGALAI {தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (2)
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
(தூக்கம்)
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

(தூக்கம்)

காலையில் நானோர் கனவு கண்டேன் - அதைக் கண்கலில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததிலேதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
கண்களிலே...கண்களிலே...

(தூக்கம்)

மனமெனும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இருகரம் நீட்டி திருமுகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

(தூக்கம்)

ALAYAMANI, KANNANA KANNANUKU {கண்ணான கண்ணனுக்கு அவசரமா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்


வானம்பாடி...
ஆஹாஹஹா...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா (2)
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

(கன்னான)

பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா (2)
கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா

(பொன்னான)

உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா (2)
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

(உள்ளத்தில்)

கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா (2)

(கண்ணான)

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா (2)
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா (2)

(கண்ணான)

"வானம்பாடி
நீ ஒரு விசித்திரமான பொண்ணு
நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா
எனக்கு ஒண்ணுமே புரியல"