படம் : வசந்த மாளிகை
இசை : எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: கலைமகள் கைப் பொருளே
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ
(கலைமகள்)
நான் யார் உன்னை மீட்ட - வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கின்றேன் - ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ
(கலைமகள்)
சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத்
தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே
(கலைமகள்)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
I am tray
Pl.mention ragam
Kv mahadevan music.
I try
Post a Comment