Sunday, August 19, 2007

Ullam Ketkumae Lyrics 'Mazhai Mazhai', {உள்ளம் கேட்குமே 'மழை மழை' பாடல் வரிகள்}

படம் : உள்ளம் கேட்குமே
பாடல் : மழை மழை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி


யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூக் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப் போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே
உள் நெஞ்சை உடையச் செய்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம்
நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்று செய் இப்போதே
உள் நெஞ்சை உடையச் செய்
(யார் வந்தது)

நீ மட்டும் 'ம்' என்றால்
உடலோடு உடல் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால்
அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவப் பெண்ணே நீயும்
ஒரு பங்குச்சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள்
அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
(மழை மழை)

தீண்டாமல் சருகாவேன்
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஏ நீயும் ஓடிவந்து
எனைத் தீண்டத் தீண்டப் பாரு
ஒரு பாதரசம்போல
நான் நழுவிச் செல்வேன் தேடு
ஏதொ ஏதொ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்
(மழை மழை)

No comments: