Sunday, August 19, 2007

Manmadhan Lyrics 'Manmadhane', {ன்மதன் 'மன்மதனே' பாடல் வரிகள்}

படம் : மன்மதன்
பாடல் : மன்மதனே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : சாதனா சர்கம்


மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னைக் கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரலை
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களைக் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை (2)
(மன்மதனே நீ)

நானும் ஓர் பெண்ணென
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்தபின்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல்கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் ஆடுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்குக் காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ (2)

மன்மதனே உன்னைப் பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளு
ஆயுள்வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு (2)

No comments: