படம் : ஜேஜே
பாடல் : காதல் மழையே
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ்
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போமா
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போமா
காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் வீழ்ந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் ஒரு துளிநீர் மெள்ளக் கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது காண்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெள்ளச் சிறைசெய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
காதல் மழையே
(தேடித் தேடித்)
தேடல் தொடங்கியதே மெய்த்தேடல் தொடங்கியதே (4)
சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய் என் உயிரே வாராய்
காதல் (6)
(காதல் மழையே)(அலைந்து உன்னை)
Friday, August 17, 2007
JayJay Lyrics "Kadhal Mazhaiye" {ஜேஜே 'காதல் மழையே' பாடல் வரிகள்}
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment