Friday, August 17, 2007

Mozhi Lyrics “Sevvaanam Selaikatti”, {மொழி “செவ்வானம் சேலைகட்டி” பாடல் வரிகள்}

படம் : மொழி
பாடல் : செவ்வானம் சேலைகட்டி
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : Jassie Gift


செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே என்னை கொன்றது பார்வையிலே
மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே
கனல் மூண்டது கண்களிலே உயிர் வேகுது நெஞ்சினிலே

யாரோ அவள் யாரோ சொல்வார் இல்லை
நேரில் கண்டு பேச நேரம் இல்லை
கண்ணில் வந்து போனாள் கையில் இல்லை
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(செவ்வானம்)

யாரோ அவள் மங்கம்மாளின் வாளைக் கையில் வாங்கி வந்தவளோ
யாரோ அவள் கண்ணகியின் பேத்தி என்று மண்ணில் வந்தவளோ
சுப்ரமண்ய பாரதியின் சோற்றைத்தின்று வந்தவளோ
சந்திரனும் சூரியனும் கூடிப்பெற்ற பெண்ணிவளோ
கள்ளுள்ள மல்லிகையோ
முள்ளுள்ள தாமரையோ
சூடான சுந்தரியோ
கம்ப்யூட்டர் கற்றவளோ
கராத்தே கற்றவளோ
புவிவாழும் தேவதையோ
யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(செவ்வானம்)

பார்த்தால் அவள் பேரைக்கேட்டு பேரின் பின்னால் என்பேர் இணைப்பேன்
கேட்டால் அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டுக்கட்டி பாடல் இசைப்பேன்
ஔவை சொன்ன தமிழையும் அங்கே இங்கே தொட்டுவைப்பேன்
ஐஸ்வர்யாவின் காதலையும் அக்கு அக்காய் பிட்டுவைப்பேன்
சொல்லாலே சொக்கவைப்பேன்
ஜோக்காலே சிக்கவைப்பேன்
சொல்லாமல் தொட்டுவைப்பேன்
வெட்கங்கள் கிள்ளிவைப்பேன்
ஆனந்தம் அள்ளிவைப்பேன்
I Love You சொல்லவைப்பேன்
கண்ணோடு கண் கவிழ்ப்பேனே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(செவ்வானம்)
(யாரோ அவள்)

No comments: