Sunday, August 19, 2007

Manmadhan Lyrics 'Kaadhal Valarthen', {மன்மதன் 'காதல் வளர்த்தேன்' பாடல் வரிகள்}

படம் : மன்மதன்
பாடல் : காதல் வளர்த்தேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : K K


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடுகட்டி காதல் வளர்த்தேன்

ஏய் இதயத்தின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒண்ணை தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள உன்னை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதைக் கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னைக் கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதைச்சேன் ஏ புள்ள
(காதல் வளர்த்தேன்)

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன்மனம் அறியாதா
பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம்தானே மானே
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதிவைச்சேன்
அது மழையில் அழியாம கொடைபுடிச்சேன்
மழைவிட்டும் நான் நனைஞ்சேன்
(ஏ புள்ள)
(காதல் வளர்த்தேன்)

உன்னைத்தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவென்
உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வையிழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும்வரை
தாயின் அன்பு அது வளரும்வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும்வரை
அடியே ஏ புள்ள புள்ள
(காதல் வளர்த்தேன்)
(இதயத்தின்)
(ஏ புள்ள)