படம் : காக்க காக்க
பாடல் : ஒன்றா ரெண்டா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா
(ஒன்றா ரெண்டா)
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்
(ஒன்றா ரெண்டா)
சந்தியாக்கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா
Sunday, August 19, 2007
Kaakha Kaakha Lyrics 'Ondra Renda', {காக்க காக்க 'ஒன்றா ரெண்டா' பாடல் வரிகள்}
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment